Thursday, August 30, 2012

கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலை கைதிகளை உறவினர்கள் சந்திக்க ஏற்பாடு

கைதிகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 9 ஆம் திகதி யாழ். சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை, அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம். செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ். சிறைச்சாலை கைதிகளால் அமைக்கப்பட்ட பனை கைப்பணிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும், யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம். செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment