Sunday, August 5, 2012

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தையையும் அதற்கு உதவிய தாயும் கைது

தனது சொந்த 12 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தையையும் அதற்கு உதவியாகவிருந்த குறித்த சந்தேக நபரின் இரண்டாவது மனைவியையும் நீர்கொழும்பு மேலதிக நீதவான் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்ததை சேர்ந்த முகமட் சிறாப்தீன் அவரது இரண்டாவது மனைவியான ரிகாயா பர்வின் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைககப்பட்டுள்ளனர். மேசன் தொழில் செய்யும் குறித்த சந்தேக நபர் இரண்டு திருமணங்கள் முடித்துள்ளளார்.

சிறிது காலத்தின் பின்னர் முதல் மனைவியை அவர் பிரிந்த போது, அவருக்கு முதல் மனைவி மூலமாக பிறந்த மகளை (பாதிக்கப்பட்ட சிறுமியை) உடன் அழைத்து வந்து கொழும்பில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் சேர்த்துள்ளார்.

சில வருடங்களின் பின்னர் அங்கு சிறுமிக்கு சுகயீனம் ஏற்படவே கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இரண்டாவது மனைவிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். ஐந்தாவது பிள்ளைக்காக அவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் கடந்த ஏழு மாத காலமாக சந்தேக நபர் தனது மகளை பாலியல் துஸபிரயோகம் செய்து வந்துள்ளார். இதனை தனது சிறிய தாய் அறிந்திருந்ததாகவும் அந்த சிறுமி பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். குறித்த சிறுமியின் பாடசாலை கல்வியையும் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த நபரையும் அவரது இரண்டாவது மனைவியையும் கைது செய்த பொலிஸார், நீதிமன்றில் ஆஜர் செய்த போதே சந்தேக நபர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com