Friday, August 31, 2012

ஐ.நா முறைமை சீர்திருத்தப்பட வேண்டும் – நியோமல் பெரேரா.

உலக நிதி மற்றும் பொருளாதார அவசரத் தேவைகளுக்கு ஏற்றவாறு ஐ.நா முறைமை சீர்திருத்தப்பட வேண்டுமென வெளிநாட்டமைச்சின் பிரதிச் செயலாளர் நியோமல் பெரேரா ஈரானில் நடைபெறும் அணிசேரா நாடுகள் அமைப்பின் 16வது உச்சி மாநாட்டின் அமைச்சர் மட்டத்திலான கூட்டதில் பேசும் போது தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக ஆழமான சமூகத் தாக்கம் ஏற்படுவதுடன், காலநிலை மாற்றம், சுற்றாடல் தரம் குறைதல், மற்றும் வள இழப்பு காரணமாக பாரிய சவால்களுக்கு முகங் கொடுக்க வேண்டியருக்கிறது எனவும், இதற்கு வினைத்திறனுள்ள பதில் தேவைப்படுவதனால், நிலைத்த சம பலமுள்ள உலக வளர்ச்சிக்கு, பொருளாதார கொள்கைத் தீர்மானங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment