Wednesday, August 29, 2012

உரும்ராயில் உள்ள வசவிளான் ஆரம்ப பாடசாலை படைவீரர்களால் திருத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் அச்செழுவில் உள்ள 511 வது பிரிகேட் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களால், உரும்ராயில் உள்ள வசவிளான் ஆரம்ப பாடசாலை முற்று முழுதாகத் திருத்தப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையின் அதிபர் கே. கனகராம் விடுத்த கோரிக்கையின் பேரில் யாழ்ப்பாண-பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துறுசிங்க இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வகுப்பறைகள் ஒரு தனியார் காணியில் 4 தற்காலிய கொட்டகைகளைக் கொண்டு நடாத்தப்படு வருவதாகவும், 460 சிறுவர் கற்கும் இந்த பாடசாலையை, சுமார் 300 பேர் கொண்ட படையணி 3 நாட்களில் திருத்தி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment