Wednesday, August 22, 2012

சமாதானத்தை எந்தவித சக்திகளாலும் சீர்குலைக்க முடியாது.

தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களால் நாட்டிற்கு மீண்டும் அச்சுறுத்தல்கள் வரலாம் என சிலர் தெரிவிப்பதை போல் இலங்கையில் எந்தவொரு சந்தர்பத்திலும் மீண்டும் தீவிரவாதம் ஏற்படுட இடமளிக்கப் போவதில்லை என்றும், நாட்டின் சமாதானத்தை எந்தவித சக்திகளாலும் சீர்குலைக்க முடியாது என நகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment