Saturday, August 11, 2012

சிறைக் கைதியின் உடலின் மறைவிடத்தில் செல்போன் ஒலி

கல்கிசை நீதிமன்றத்தில் இருந்து வெளிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபரின் உடலின் மறைவிடத்திலிருந்து தொலைபேசி ஒலித்ததால் பதற்றமடைந்த சிறைக் காவலர்கள் அவரைச் சோதனையிட்டபோது அவரின் உடலின் கீழ்ப்பகுதியில் செல்போன் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

சிறையில் இருக்கும் சந்தேக நபருக்கு தரகர் ஊடாக இந்த கையடக்க தொலைபோசி அனுப்பபட்டுள்ளதாகவும், அதனை அனுப்பிய நபர் உரியவரிடம் கையடக்க தொலைபோசி சேர்ந்து விட்டதா என அறியவே இவ்வாறு அழைப்பு எடுத்துள்ளார் என தெரிவிக்ப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com