Tuesday, August 21, 2012

உலக கடத்தப்பட்டோர் தினத்தை வடக்கில் நடாத்த போகிறாராம் மனோ கணேசன்.

ஆகஸ்டு 30ம் திகதி உலக கடத்தப்பட்டோர் தினமாக உலக நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது எனவும், அன்றைய தினத்தில் இலங்கையில் கடத்தப்பட்டோர் மற்றும் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாபெரும் மாநாடொன்றை வடக்கில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தனியார் வானொலிக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

வடக்குத் தமிழர்தான் அதிகமாக இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், குடிமக்கள் கண்காணிப்பு ஆணையம், மற்றும் பிற குடிமக்கள்சார் அமைப்புகளுடன் இணைந்து வடக்கின் நகரமொன்றில் இம்மாநாட்டை நடாத்தவிருப்பதாகவும், இந்த விடயம் தொடர்பாக தற்போது அதிகம் விபரிக்க இயலாது என்றும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com