Wednesday, August 29, 2012

சிறுவர்களுக்கான கடவுச் சீட்டின் வலிதுடைமைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் 10 வருடத்தில் இருந்து 3 வருடமாகக் குறைக்கப்பட்டுள்ள தெனவும், ஒரே நாளில் கடவுச் சீட்டு வழங்கும் சேவைக்கான கட்டணம் 7500 ரூபாயில் இருந்து 3500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறுவர் தோற்றத்தில் விரைவான மாற்றங்கள் ஏற்படுவதால் 10 வருட கடவுச் சீட்டால் பெற்றோர் விமான நிலையத்தில் பல சிரமங்களை எதிர் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது, என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment