Monday, August 6, 2012

அரசாங்கத்தின் புதிய திட்டங்களுக்கு எதிர்கட்சிகள் பாரிய தடையாகவுள்ளன- அமைச்சர் ராஜித

அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கும், ஏனைய திட்டங் களுக்கும், எதிர்கட்சிகள் பாரிய தடையாகவுள்ளன என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் எந்த ஒரு தேர்தலை நடத்த முயன்றாலும் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலை கண்டு அஞ்சுகின்றமை புலனாகின்றது என அவர் குறிப்பிட்டார். தேர்தலை பகுதி பகுதியாக நடாத்துவதில் எதிர்க் கட்சிக்கு சாதகமான நிலைமை காணப்பட்ட போதிலும் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி அஞ்சுகின்றது என மேலும் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் அபிவிருத்திக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி தடையாகவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com