Wednesday, August 29, 2012

அதாவுல்லா தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறிவருகிறார் - ஃபவ்ரல் அமைப்பு

அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அம்பாறை பிரதேசத்தில் மாகாண சபை தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறிவருகிறார் என்று பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஃபவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குடிநீர் வழங்கல் சபையின் சுற்றுலா விடுதியை பலவந்தமாக பிடித்து வைத்திருத்தல், ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்குச் சொந்தமான பிரதேச வானொலியை அமைச்சர் கலந்து கொள்ளும் தேர்தல் கூட்டங்களில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்குப் பயன்படுத்தல், தனக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை தேர்தல் முடிந்தவுடன் இடமாற்றம் செய்வதாக பகிரங்கமாக பிரகடனப்படுத்தல், போன்றவைகளைச் அமைச்சர் அத்தாவுல்லா செய்து வருவதாக ஃபவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment