Tuesday, August 28, 2012

சுவிஸ் வங்கயில் கணக்கு வைத்திருப்போர் பெயர்களைக் அரசு கூறவேண்டுமாம் - லால்காந்த

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இலங்கையரின் பெயர்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணியின் இணைப்பாளர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

25 ம் திகதி கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற "பொருளாதாரத்தை தாக்குபவர்களை நாம் சுதந்த்திமாக திரிய விடலாமா" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையடாலில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் 2002ல் 22.9மில்லியனும், 2003ல் 34.79மில்லியனும் , 2004ல் 1059மில்லியனும் , 2005ல் 177,89மில்லியனும் (சுனாமிக்குப் பிறகு கூடிய தொகை) 2006ல் 56.59மில்லியனும், 2007ல் 123.59மில்லியனும் , 2008ல் 104.89மில்லியனும், 2009ல் 87.5 மில்லியனும், 2010ல் 111.3 மில்லியனும், 2011ல் 85 மில்லியனும், சுவிஸ் ஃப்ராங்குகளை வைப்பில் இட்டுள்ளனர் எனவும் இவற்றில் பெரும்பாலானவை சேமப்புக் கணக்கில் இடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment