Friday, August 31, 2012

அவர்களை உடனடியா பிடி. பொலிஸ் நிலையம் முன் ஆதரவாளர்களுடன் உட்காந்தார் பா.உ ஹரீஸ்

அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு இன்று (31.08.2012) பிற்பகல் விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட கட்சி முக்கியஸ்தர்களை வளிமறித்த குழுவொன்று அவர்களை தாக்க முற்பட்டதுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளது.

மேற்படி சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முக்கியஸ்தர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பு வீதியில் அமர்ந்திருந்து தமது அதிருப்தியை வெளிக்காட்டி அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிருப்தியாளர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியல் அமர்ந்திருப்பதனையும், அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையப்பொறுப்பதி ஆகியோருடன் உரையாடுவதனையும், பாதையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களிடம் பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்வதனையும் படங்களில் காணலாம்.




No comments:

Post a Comment