Saturday, August 25, 2012

முதலமைச்சர் வேட்பாளராக அனோமா

எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் மேற்கு மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சிகளின் கூட்டணி சார்பில் முதலமைச்சர் பதவி வேட்பாளராக தனது மனைவி அனோமாவை நிறுத்துவதற்கு முன்னாள் இராணுவத் தளபதியும் ஜ.தே.மு.தலைருமான சரத் பொன்சேகா முயன்று வருவதாக அறிய முடிகின்றது.

நீதிமன்றத் தீர்ப்பினால் தற்போது தான் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலையில், மனைவியை முன்னிறுத்தி தான் பின்னால் நின்று அரசியல் செய்யவிருப்பதாகவும், இது தொடர்பாக சரத் பொன்சேகா ஐ.தே.கட்சியின் பல குழுக்களிடமும் தொடர்பு கொண்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com