Monday, August 6, 2012

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இலங்கையர்கள் இந்தியா அகதிமுகாமில் சடலமாக மீட்பு

இந்தியா திண்டுக்கல் பகுதியில் உள்ள தொட்டனூத்து அகதி முகாமில் 3 இலங்கையர்கள் வறண்ட கிணறென்றில் இருந்து உடல் கருகிய நிலையில சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அகதிகளான 35 வயதுடைய கலைச்செல்வி, அவருடைய 12 வயதுடைய மகன் வினோத் மற்றும் 7 வயதுடைய மகன் கௌதம் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com