Friday, August 10, 2012

வெளிநாட்டு பெண் ஒருவரின் சடலம் பம்பலப்பிட்டியில் மீட்பு

வெளிநாட்டு பெண் ஒருவரின் சடலம் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து மீட்கப்ட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளன்ர்.

உயிரிழந்துள்ள வெளிநாட்டு பெண், ரயில் மோதி உயிரிழந்துள்ளாரா அல்லது தற்கொலையா என இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், குறித்த பெண் தாய்லாந்து அல்லது சீனாவாக இருக்கலாம் என அவரின் கடவுச்சீட்டு, மற்றும் உடைமைகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com