Wednesday, August 15, 2012

கனடாவில் மரணங்களின் நினைவு கூர்தல்.

எதிர்வரும் 19ம் திகதி கனடா ஸ்காப்ரோவில் மரணங்களின் நினைவு கூர்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. கனடிய கருமையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ரஜணி திரணகம, சூசைப்பிள்ளை நோபேட், செல்வி ஆகியோரின் நினைவுகள் மீட்கப்படவுள்ளன.

புலிகள் விடுதலை எனும்பெயரால் வன்முறையை கையிலெடுத்தபோது புலிகளின் வன்செயல்பாதை தமிழ் மக்களின் போராட்டத்தை திசைதிருப்புகின்றது என்பதை ஆரம்பத்திலேயே வெளிப்படையாக எடுத்துரைத்து போராட்டம் செல்லவேண்டிய பாதையை தெளிவாக எடுத்துச்சொல்ல முற்பட்டபோது புலிகளால் இவர்கள் குரல்வளை நெருக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com