Wednesday, August 15, 2012

ஐ.தே.கட்சியை விட்டுப் போகமாட்டேன் - கண்ணீருடன் தயாசிரி.

எந்தக் காரணத்தைக் கொண்டும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு நான் போகமாட்டேன் என்று அநுராதபுத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

எதிர்கட்சியினரை விட எமது கட்சிக்காரர்களே என்மீது சேற்றை வாரி வீசுகிறார்கள் எனவும், இது எனக்கு மிகலும் கவலையாக உள்ளது எனவும், நான் மனச்சாட்சிப்படி நடப்பவன், பணத்துக்காக கட்சிமாறி எனது சுயத்தை இழந்து போகமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் என்மீது ஆதரவு வைத்துள்ள குருநாகல் மாவட்ட மக்களின் கௌரவம் மற்றும், ஐக்கிய தேசிய கட்சி கௌரவத்தைப் பாதுகாப்பேன் எனவும், எல்லோரும் ஒன்றுபட்டு ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com