Thursday, August 16, 2012

இடுப்பில் துப்பாக்கி சொருகிக் கொண்டு வரும் பணிப்பாளர்

தென் மாகாணசபை அமைச்சர்மாரின் உத்தியோக பூர்வ குடிமனைத் தொகுதியில் அண்மையில் நிகழ்ந்த சூட்டுச் சம்பவம் தொடர்பான நபர் பிஸ்டல் பயன்படுத்தினார் என்றும், அவர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒரு பணிப்பாளர் எனறும், அதிகாரசபையின் கூட்டத்துக்கு வரும் பொழுது அவர் இடுப்பில் பிஸ்டலைச் சொருகிக் கொண்டே வருவார் என்றும், தென் மாகாணசபை அமைச்சர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சபை நடவடிக்கையின்போது இவ்வாறு தெரிவித்த அமைச்சர், லபுதுவை சூட்டுச் சம்பவத்தின் போது சபை உறுப்பினர் ஒருவர் முழங்காலைத் தட்டிக்கொண்டு கையை உயர்த்தி மிரட்டிக் கொண்டிருந்தார் எனறும், இவ்வாறு போய்க்கொண்டிருந்தால், சபைக்கு வரும் போது குண்டு துளைக்காத ஆடையை அணிந்து கொண்டுதான் நாங்கள் இந்த சபைக்கு வர வேணடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com