Thursday, August 16, 2012

40 ஆயிரம் லீட்டர் சட்டவிரோத மதுசாரத்தை சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட 40 ஆயிரம் லீட்டர் மதுசாரம் அடங்கிய 2 கொள்கலன்களை இலங்கை சுங்க பகுதியின் விசேட பிரிவு கைப்பற்றியுள்ளதாகவும், 96 சதவீதம் எத்தினல் எல்ககோல் கலக்கப்பட்ட மதுசாரம் இதில் அடங்கியிருந்ததாகவும், பிரதி சுங்க அத்தியட்சகர் சனத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதே விதமாக இதற்கு முன்னரும் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 கொள்கலன் மதுசாரம் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com