Thursday, August 16, 2012

மின்வெட்டு 3 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும்

புத்தளம் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தேசிய மின்சார தொகுதியுடன் இணையும் மின்சாரம் இழக்கப்பட்டமையினால் மேற்கொள் ளப்படும் தற்காலிக மின்வெட்டு 3 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை காரணமாக இரவு நேர மின் வெட்டு இடம்பெறாதெனவும், 3 பிரிவுகளாக இன்றுமுதல் பகல் நேரத்தில் 3 மணித்தியாலமும் 20 நிமிடங்கள் வீதம் மின்வெட்டு இடம்பெறுமென மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.20 வரையும், முற்பகல் 11.20 முதல் பிற்பகல் 2.40 வரையும், பிற்பகல் 2.40 முதல் மாலை 6.00 மணி வரையும், இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும். தற்போது நடைபெறும் உயர்தர பரீட்சை காரணமாக இரவு நேரங்களில் மின்வெட்டு இடம்பெறாதென மின்சார சபை அறிவித்துள்ளது.

முதலீட்டு சபை, கைத்தொழில்பேட்டை, மற்றும் வைத்தியசாலைகளில் மின்வெட்டு இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com