Saturday, August 25, 2012

நிதி மோசடியில் சம்பந்தப்பட்ட 284 பட்டதாரிகள் சிறைகளில் உள்ளனர்.

2011ம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 284 பட்டதாரிகள் சிறையில் உள்ளனர் எனவும், இவர்களில் பெரும் பாலானோர் நிதி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களார் என்று, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் நிமால் கொட்டவெலகெதர தெரிவித்துள்ளார்.

பாமர மக்கள் மாத்திரமின்றி, டாக்டர்கள், பொறியிலாளர்கள் என்று படித்தவர்களும் சிறையில் இருக்கின்றார்கள் எனவும், தராதரம் பார்க்காது படிக்க விரும்பும் யாவருக்கும் கற்பதற்கான வசதி இலங்கையில் செய்து கொடுக்கப்படுகின்றது என்றும், கல்விக்கு சிறைச்சாலை தடையாக அமையக்க்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment