Sunday, August 12, 2012

ஈரானில் பூகம்பம் 180 பேர் மரணம் ஆயிரக்கணக்கானோர் காயம்.

ஈரானில் ஏற்பட்ட பூகம்பங்களில் 180 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதுடன் ஆயிரத்து 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக, ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தப்வீஸ் மற்றும் அஹார் நகரங்களே, இப்பூகம்ங்களினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு நகரங்களில் ஏற்பட்ட பூகம்பங்கள், 6.4 மற்றும் 6.3 ரிச்டர் அளவீட்டில் பதிவாகியுள்ளது. முதலாவது பூகம்பம் ஏற்பட்டு 11 நிமிடங்களின் பின்னர், 2வது பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இப்பூகம்பங்களினால் 4 கிராமங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளன.

அத்துடன் மேலும் 60 கிராமங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்பு தொடர்பான மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக, ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com