Friday, August 17, 2012

பொலிஸ் (119) உடன் விளையாடிய 100 பேர் கைது

கடந்த இரண்டு நாட்களில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு விளையாட்டாக போலி தகவல்களை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் றோஹன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 100 பேரும் 119 என்ற இலக்கத்திற்கு பிழையான தகவல்களை குருந்தகவல் மூலம் வழங்கியுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான போலி தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, கைது செய்யப்பட்டுள்ள 100 பேரையும் பொலிஸாருக்கு பிழையான தகவல்கள் வழங்கிய குற்றத்திற்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com