Thursday, July 26, 2012

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகராக பதவி இறக்கம்

யக்கல பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி நிஷாந்த குமார பொலிஸ் பரிசோதகராக பதவி தரம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யக்கல பொலிஸ் நிலைய உத்தியோக்கத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்க வழங்கிய விண்ணப்பத்தை உரிய காலத்திற்குள் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு வழங்காதிருந்தமை, வாகன விபத்தொன்று குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தாமை, பிடிவிறாந்து குறித்து முறையாக செயற்படாமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின்படி, பொறுப்பதிகாரி நிஷாந்த குமார பொலிஸ் பரிசோதகராக பதவி இறக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com