Friday, July 27, 2012

முன்னாள் சங்கநாயக்கர் சுடுகலன் விற்றுள்ளார்.

காலி மாவட்டத்தின் முன்னாள் பிரதான சங்க நாயக்கரான இந்துருவ பண்டாரிகொட சுனந்தாராமாதிபதி மிகெட்டுவத்த சுமிந்த ஹிமி சுடுகலனை விலைக்குக் கொள்வனவு செய்தார் என்று காலி சிறைச்சாலையில் சாட்சி கூறியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று பலப்பிட்டிய நீதவான் அசங்க போதரகம முன்னிலையில் அறிக்கை சமர்ப்பித்தது.

சுடுகலனை தன்னுடன் வைத்திருந்தது, குற்றவாளிகளுக்கு இருப்பிடம் அளித்தது போன்ற பல குற்றங்கள் தொடர்பில் சுமிந்த ஹிமி மற்றும் எட்டு சாட்சிகள் தடுப்புக் காலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தேரருகாக வாதாடும் சட்டத்தரணி நாரத மெண்டிஸ் சுதந்திமான சாட்சியத்தையும் சுடுகலனையும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறினார். வழக்கின் பின் சிறைச்சாலை வாகனத்தில் ஏறும்போது முதல்முறையாகப் பேசிய ஹிமி, ஒருவரின் சாட்சியத்தைத் தவிர மற்றவை நல்லன என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com