Thursday, July 26, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்த தேசிய திட்டம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கு தேசிய திட்டம் வகுக்கப்பட்டுள்ள தாகவும், குறித்த திட்டத்திற்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளதாகவும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்கும், அதனை அமுல்ப்படுத்துவதற்கும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் நியமிக்கப்பட்ட செயலணி, அதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட தேசிய செயற்திட்டத்துடன் தொடர்புடையதும், ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டு, அவதானம் செலுத்தப்பட வேண்டிய பிரதான துறைகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இத்திட்டத்தில் துறைசார் விடயங்கள், அதனை அமுல்ப்படுத்தும் அமைப்பு, முக்கிய தரவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இத்தேசிய திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com