Saturday, July 21, 2012

மன்னார் ஆயருக்கு எதிராக ஓட்டமாவடியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் முஸ்லீம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படும் மன்னார் ஆயரின் செயற்பாட்டினைக் கண்டித்து ஓட்டமாவடி முகைதீன் ஜீம்ஆப் பள்ளிவாயலுக்கு முன்னாள் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வெள்ளிக்கிழமை ஜீம்ஆத் தொழுகையின் பின்னர் பள்ளிவாயலுக்கு முன்னாள் ஒன்று திரண்ட பொது மக்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆயரின் செயற்பாட்டை கண்டித்து புலிகள் ஆயுத முனையில் சாதித்ததை இன்று பேனா முனையில் சாதிக்க முயல்வதைக் கண்டிக்கின்றோம். இன ஒன்றுமையை திட்டமிட்டு குலைக்காNது, ஆயரே முஸ்லீம்களின் காணிகளை அபகரிக்காதே, பக்கச் சார்பாக இனத் துவேசம் கட்டாதே மன்னாரில் முஸ்லீம்கள் வாழ வேண்டாமா போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் ஓட்டமாவடி முஹைதீன் ஜீம்ஆப் பள்ளிவாயல் நிருவாகம், கல்குடா ஜம்தியதுல் உலமா சபை உறுப்பினர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர்கள், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com