Wednesday, July 25, 2012

தெற்கைப் சுறுட்டி வடக்கிடம் கொடுக்க ரணில் முயற்சி - லால் பெரேரா

தெற்கை சுறுட்டி வடக்கு தமிழ் புகலிடக்காரர்களிடம் கொடுக்கத்தான் ரணில் விகிரமசிங்க முயற்சித்தார் என்று ஐக்கிய தேசிய கட்சியையும், அதன் தொழிற் சங்கங்களையும் காப்பாற்றும் அமைப்பின் செயளாலர் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.

20 தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியை தோற்க வைத்துள்ள ரணில், ஒருபோதுமே பதவிக்கு வரப்போவதில்லை எனவும், கட்சியில் துவேசமான அரசியல் நடத்தும் அவர் ஹிட்லராக நடந்து கொள்கிறார் எனவும், லால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரின் இத்தகைய செயற்பாடுகளால்தான் 64 பிரதிநிதிகள் கட்சியைவிட்டு விலகி மகிந்த ராஜபக்ஷ மடியில் விழுந்துள்ளனர் என்றும், நடைபெறவிருக்கும் மூன்று மாகாணத் தேர்தல்களில் ஏற்படும் தோல்விக்குப் ரணிலே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com