Monday, July 30, 2012

பாதாள சுமுது தலையில் சுடப்பட்டு கொலை.

கட்டுநாயக்க பாதாள அஜித் குழுவைச் சேர்ந்த சுமுது என்பவர் மற்றுமொரு பாதாள குழுவினரால் மினுவாங்கொடை முச்சந்தியில் வைத்து தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கொலைக்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குறித்த நபரின் தலையில் இரண்டு குணடுகள் பாய்ந்துள்ளதனால் உயிரிழந்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்டுள்ள சுமுதுமீது, நளிந்த மற்றும் ரோகித என்ற இருவரையும் கொலை செய்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com