Saturday, July 28, 2012

“ இன்னும் இளமையடைய வேண்டுகிறேன்” – ஜனாதிபதி.

அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பா.ம. உறுப்பினர் சந்திராணி பண்டார. கடந் 24 ம் திகதி அதிகாலை 5.48 க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. “ ஹலோ.. ஆ எப்படி சுகம்?” என்று தொடர்பு கொண்டவர் கேட்கின்றார். குரலை அடையாளம் கண்டுகொண்ட சந்திராணி, “ குட் மோனிங் சேர் ‘ என்று பதில் கூறுகின்றார் “ “இன்று நல்ல நாள் அல்லவா?. பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ‘இன்னும் இளமையடைய வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்றேன்” என்று வாழ்த்தினார். “ ஆ, மிகவும் நன்றி சேர்” என்று சிரித்தவாறே ஜனாதிபதிக்கு நன்றி கூறி தொடர்பைத் துண்டித்துவிட்டார் சந்திராணி. அவருக்கு அன்று 50 வயது.

அவரின் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவோ காலை 10.58 க்குத்தான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாராம்.

எதிர்கட்சி பாராளுமன்று உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்துக்கொள்ளும் ஜனாதிபதியின் வியூகங்களில் இதுவும் ஒன்று எனவும் அவர்களின் பிறந்தநாள் அன்று காலை 5 மணிக்கு முன்பு யாரும் அழைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதியின் அழைப்பொலி ஒலிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com