Thursday, July 26, 2012

ரிசாத் பதியூதினை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிசாத் பதியூதினுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று 26ம் திகதி உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணிகள் 7 பேர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் டி சில்வா இவ்வுத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி அமைச்சர் ரிசாத் பதியூதின் எதிர்வரும் செப்டெம்பர் 5ம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும்.

செப்டெம்பர் 5ம் திகதிவரை சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படக்கூடாதெனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் செப்டெம்பர் 5ம் திகதி அமைச்சர் ரிசாத் பதியூதின் விளக்கமளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com