Thursday, July 26, 2012

பொலிஸ் ஆணைக்குழு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சேனக வல்கம்பாய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில், 6 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

எல்லே குணவங்ச தேரர், டி. திசாநாயக, ஷாமேன் மதுரசிங்க, ஆர். சிவராமன், எம்.எம்.எம். மவ்ஜூத், நியூட்டன் குணரட்ன ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதும், அவற்றை விசாரிப்பதும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கடமையாகும். குறித்த பொலிஸ் ஆணைக்குழுவில் 4 மாகாண அலுவலகங்களும், இரண்டு மாவட்ட அலுவலகங்களும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com