Friday, July 27, 2012

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான ஏழு சிறுமிகள் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைப்பு

மாவனெல்ல சிறுவர் இல்லம் ஒன்றின் உரிமையாளரால் பாலியல் துஷ்பிரயோக த்திற்குள்ளான ஏழு சிறுமிகள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சிறுவர் இல்லத்தில் இருந்த ஏழு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்கானமை மாவனெல்ல சட்ட வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பில் சிறுவர் இல்லத்தின் உரிமையாளரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com