Friday, July 20, 2012

பாதாள உலகத் தலைவர்கள் பலர் நாட்டை விட்டு தப்பியோடி இந்தியாவில் அஞ்ஞாவாசம்.

முஸ்லிம் பாதாள உலகில் தற்போது எஞ்சியிருக்கும் இராஜா என்று கருதப்படும் ‘மாமாஸ்மி’ என்ற பாதாள குற்றவாளி உட்பட பிரபல பாதாள உலகத் தலைவர்கள் பலர் நாட்டைவிட்டோடி வெளிநாடுகளில் மறைந்திருப்பதாக புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

பெரும்பாலோர் படகுகளில் தப்பியோடி தென்னிந்தியாவில் மறைந்திருப்பதாகவும் அவ்வப்போது படகுகளில் இலங்கைக்கு வருவதாகவும் தெரியவருகிறது.
மாமா அஸ்மின் எனும் தெல்பாலா, வெலே சுதா, கிம்புலா எலே குணா, கொட்ட காமினி போன்ற பிரதான குற்றவாளிகள் பலர் இப்போது இந்தியாவில் மறைந்துள்ளனர். கிம்புலா எலே குணா, கொட்ட காமினி போதைப் பொருள்களுடன் பிடிபட்டு சென்னைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அறியவருகின்றது.

இத்துடன் நந்துன் பிரதீப் உட்பட மேலும் பல குற்றவாளிகள் பிரான்சு மற்றும் இத்தாலியில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com