Monday, July 23, 2012

கபே மட்டுநகரில் தேர்தல் கண்காணிப்பகத்தை திறந்து வைத்தது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) தனது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைளுக்கன கண்காணிப்பு அலுவலகத்தினை இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் உத்தியாக பூர்வமாக திறந்து வைத்துள்ளது.

மட்டக்களப்பு மன்றேசா வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச்சங்க கட்டிடத் தொகுதியல் திறக்கப்பட்டுள்ள இவ்வலுவலக திறப்பு விழாவில் மட்டக்களப்பு சிவில் அமைப்பின் தலைவர் டொக்டர் வி.பிறேமகுமார், மட்டக்களப்பு வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.மாமாங்கராஜா,மட்டக்களப்பு வர்த்த சம்மேளனத் தலைவர் ரஞ்சிதமூர்த்தி,எகட் நிறுவனத்தின் பணிப்பாளர் கிறைட்டன்செலர், கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஹபீப் றிபான், கிழக்குமாகாண இணைப்பாளர் எம்.எம்.ஏ.மனாஸ்,கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பளர் கீர்தி தென்னக்கோன்,இணைப்பாளர் ஏ.எச்.ஏ.குசைன் மற்றும் கிழக்குமாகாண சபை வேட்பாளர்களான சல்மாகம்சா(முஸ்லிம்காங்கிரஸ்), தங்கேஸ்வரி(சுயேட்சைக்குழு), சபீக்கா(ஐக்கியதேசியக்கட்சி),ருத்திரமலர்(ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) ஆகியோர் கலந்து கொண்டனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com