Thursday, July 26, 2012

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பின் நிர்மாணப் பணிகளை,ஜனாதிபதி அவதானித்தார்.

மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கின் கீழ், ஜனசெவன, நகமு புறவர திட்டத்தின் பிரகாரம், அடுக்கு மாடி குடியிருப்புகள் புனரமைக்கப்படுகின்றன. இதற்கிங்க மாளிகாவத்தை தொடர்மாடி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புனரமைப்பு பணிகளை இன்று பார்வையிட்டுள்ளார்.

39 வருடங்களுக்கு பின்னர், இம்மாடி குடியிருப்பு புனரமைக்கப்படுவதாகவும், இதற்காக 280 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், 90 அடுக்கு மாடிகளை கொண்ட இக்குடியிருப்பு திட்டத்தில், ஆயிரத்து 500 வீடுகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com