Sunday, July 22, 2012

சட்டவிரோத வியாபாரம். மட்டு மாவட்டத்தில் 40 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்-

சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்திரை இடப்படாத அளவீட்டு உபகரண பயன்பாடு, குறைந்த நிறையில் பாண் விற்றமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி, எருவில், ஆரயம்பதி உள்ளிட்ட நகரங்களில் உள்ள எரிபொருள் நிறப்பு நிலையம், வெதுப்பகம், ஹோட்டல், தங்க ஆபரண மற்றும் ஆடை விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக இச்சோதனை இடம்பெற்றதாகவும் எதிர்வரும் நாட்களிலும் சோதனை நடத்தப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அளவை மற்றும் தரக்குறிப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com