Tuesday, July 17, 2012

அமெரிக்க கோர்ட் தீர்ப்பு : ஒபாமாவை கொல்ல சதி வாலிபருக்கு 16 ஆண்டு சிறை.

பிர்மிங்காம் :அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ், வாலிபருக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் உலுக்பெக் கொடிரோவ். வயது 25. இவர் கடந்த 2009ம் ஆண்டு மாணவர் விசா மூலம் அமெரிக்கா வந்தார். மருத்துவக் கல்லூரியில் சேர வந்த உலுக்பெக்குக்கு இடம் கிடைக்கவில்லை. மாணவர் விசா 2010ம் ஆண்டு முடிந்து விட்டது. எனினும் சட்டவிரோதமாக அதன்பின் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார்.

இந்நிலையில் தீவிரவாத அமைப்புகளுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அதிபர் ஒபாமாவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டது. அப்போது தீவிரவாதிகளுக்கு உதவியதாகவும், வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும் போலீசார் அவரை கைது செய்தனர். அலபாமா நெடுஞ்சாலையில் உள்ள மோட்டலில், துப்பாக்கிகள் வாங்கும்போது கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உலுக்பெக்குக்கு 15 ஆண்டு 8 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் ஜாய்ஸ் ஒய்ட் வான்ஸ் கூறுகையில், இந்த தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கை என்று தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com