Thursday, June 14, 2012

LLRC பரிந்துரைகளில் சில இவ்வாண்டில நடைமுறைப்படுத்தப்படும் –ஜனாதிபதி செயலாளர்.

LLRC பரிந்துரைகளில் சில முக்கிய பரிந்துரைகள் இந்த ஆண்டு நடைமுறை ப்படுத்துவதற்கு அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும், நிதி பற்றாக்குறை காரணமாக அடையாளம் காணப்பட்ட பல பரிந்துரைகள் அடுத்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் எனவும், ஜனாதிபதியின் செயலாளரும் LLRC யின் பரிந்துரைகள் பற்றி ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தவைருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 285 LLRC பரிந்துரைகளில் 33 தேசிய நலன் சார்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தமது ஆய்வு தொடர்பான அறிக்கையை இம்மாத இறுதியில் அரசுக்குச் சமர்ப்பிக்க விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச்சில் ஐ.நா மனிதவுரிமை ஆணைக்குழு LLRC யின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment