Sunday, June 3, 2012

புலிகளைப் பின்பற்றும் மாஓ இயக்கம் – இந்திய ஊடகம்

மாஓ இயக்கம் புலிகளின் தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக இந்தியாவின் Deccan Chronicle ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய ஆயுதப் போரின் போது பெண்களைப் பயன்படுத்தி தாக்குதல் வியூகம் அமைத்ததாகவும் அதே வழிமுறையை தற்போது மாஓ தீவிரவாதிகளும் பின்பற்றி வருவதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

பெண்களைப் பயன்படுத்தி படையினரின் கவனத்தைத் திசை திருப்பி அண்மைக்காலமாக மாஓ இயக்கம் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

அண்மையில் சட்டிஸ்காரில் மாஓ தீவிராவதிகள் காட்டுப் பகுதியில் பெண்களை அழ விட்டு, அந்தக் குரலைக் கேட்டு வந்த பொலிஸ்ப் படை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நிராயுதபாணியான பெண்களை நாடு காட்டில் நடக்கவிட்டு, படையினரின் முழுக் கவனத்தையும் பெண்களின் பால் ஈர்க்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவ்வாறான தாக்குதல் வியூகங்களை புலிகள் பயன்படுத்தியிருந்ததாக Deccan Chronicle ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com