Saturday, June 9, 2012

புதைகுழிகளில் புலித்தலைவர்களின் சொத்துக்கள். தேடுகின்றது புலனாய்வுத் துறை

இறுதிகட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து முக்கிய தலைவர்களின் சொத்துக்கள் புதுகுடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மயானப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சொத்துக்கள் பற்றிய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆனால், குறித்த இடம் தொடர்பில் தெளிவற்று காணப்படுவதாகவும் ,குறித்த சொத்துக்கள் கொள்கலன் ஒன்றில் ஏற்றப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் தொடர்பிலான விபரங்கள் வவுனியாவிலிருக்கும் ஒருவருக்கு தெரியும் என்பதோடு குறித்த நபர் விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment