Wednesday, June 13, 2012

கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதி தீர்மானம் என்கிறார் பிரதி அமைச்சர் முரளிதரன்

கிழக்கு மாகாண சபையை விரைவாக கலைத்து மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் சுபராஜ் ஹோட்டலில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, கிழக்கு மாகாண சபையை எதிர்வரும் ஒருமாத காலத்திற்குள் கலைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment