Thursday, June 21, 2012

இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் உயர்ந்த பட்சம் பாதுகாக்கப்படுகின்றது. அமெரிக்க பிரதிநிதி

தொழிலாளர் உரிமைகளை பேணுவதற் காக, இலங்கை செயற்படும் விதத்தை, அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தெற்காசியாவிற்கு பொறுப்பான விசேட பிரதிநிதி மைக்கல் ஜே. ஜெலன்ஸி, பாராட்டியுள்ளளார்.

தொழிலாளர்களின் உரிமைகள், இலங்கையில் உயர்ந்தபட்சம் பாதுகாக்கப்படுவதாகவும், இதன்மூலம், இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படுவது, சாட்சிகளுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக இலங்கை தெளிவான நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் இயங்கி வரும் அமெரிக்க பல்தேசிய கம்பனிகளின் ஊழியர்களுடன், அவர் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment