Monday, June 11, 2012

பதவியைப் பறிகொடுக்கும் பொலிஸ் நிலைய அதிகாரிகள்.

தமது கடமையைச் சரியாகச் செய்யாத பொலிஸ் நிலைய அதிகாரிகள் அதிகாரிகள் தரத்திலிருந்து பதவி இறக்கப்பட்டு சதாரண பொலிஸ் அலுவலராக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பதவியிழந்திருக்கின்றனர் எனவும், தற்போதைய பொலிஸ் மா அதிபர் என் கே. இலங்ககோன் பதவி ஏற்றதன் பின்னர் இடம் பெற்றுவரும் சீர்திருத்தங்களுக்கு அமைய கிழமைக்கு குறைந்தது நாலைந்து பேர் இவ்வாறு தமது பொலிசு நிலைய அதிகாரிகள் பதவியைப் பறி கொடுக்கின்றனர் எனவும் தலமையகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment