Friday, June 15, 2012

நாட்டை துண்டாடும் கொள்கை நம்மிடமில்லை. சுமந்திரன்

அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் தனிநாடு அமைக்கும் திட்டத்தை கொள்கையாகக் கொண்டுள்ள கட்சிகளைத் தடை செய்கின்றது. மேற்படி அரசியல் அமைப்பின் பிரகாரம் ITAK, TULF, TELO மற்றும் EPRLF ஆகிய கட்சிகளை தானாகவே தகமை அற்றகட்சிகளாக அறிவிக்கவேண்டும் என சட்டத்தரணி ஒருவரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து நாழிதலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிக்கையில் இலங்கையை துண்டாடும் கொள்கை தமிழரசுக் கட்சியினுடையது அல்ல எனவும் தமிழ் பகுதிகளைத் துண்டாட முயற்சிக்கின்றது என்று படம் போட்டுக் காட்டுவதற்கான காரணம் தமிழில் உள்ள அதன் யாப்பை சத்தியப் பிரமாணம் செய்த ஒரு மொழி பெயர்ப்பாளர் வேண்டுமென்றே ஆங்கிலத்தில் பிழையாக மொழி பெயர்த்ததுதான் என்றும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com