Saturday, June 9, 2012

மனசாட்சிப்படி செயல்பட ஒரு வாய்ப்பு. பிக்குகளை விரட்ட ஆதரவு கேட்கிறார் ராஜபக்ச

பாராளுமன்றம் செல்லத் தகைமையற்றவர்கள் பட்டியலில் பௌத்த பிக்குகள் உட்பட அனைத்து மதகுருமார்களையும் உள்ளடக்க வேண்டும் என்று தான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் மனச்சாட்சிப்படி வாக்களிக்க கட்சிகள் இடம் தர வேண்டும் என்று பா.ம.. உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சகல கட்சிகளினதும் ஆதரவு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் இந்த முன்மொழிவு தொடர்பாக ஐ.தே.க.வையோ ஸ்ரீ.ல.சு.க.வையோ கேட்க வேண்டியதில்லை என்றும் தமது மனசாட்சியைக் கேட்டால் போதும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. It's reasonable that parliamentarians
    need a good qualification and eligiblity enter the parliament,but the idea to prevent the religious leaders entering the parliament,not reasonably justied.

    ReplyDelete