Wednesday, June 13, 2012

புரட்சி முகம் காட்டிய ஏகாதிபத்திய நாடுகள்.

புரட்சி பற்றி எங்களுக்கு கற்றுக் கொடுக்க முனைந்தவர்களின் பின்னால் நின்று ஊக்கமளித்தது ஏகாதிபத்திய நாடுகள் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், அவர்களைப் பாதுகாப்பதில் அவுஸ்திரேலிய உயர் தூதுவர் மிகப்பெரிய அக்கறை கொண்டிருந்தார் எனவும் மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சோசலிக மாணவர் சங்க மகாநாட்டில் முக்கிய உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் குறிப்பிட்ட அவர், மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்றவர்களை பயன்படுத்தியது இடது சாரி சமூக அரசியல் மாற்றம் விரும்புபவர்களின் முகத்துடன் மக்கள் விடுதலை முன்னணியை உடைப்பதற்கு, மாணவர் சங்கத்தினர் முயன்றனர் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment