Tuesday, June 12, 2012

தமிழ் மக்களுக்கு உதவி செய்யப்போறாராம் ஜெயலத் ஜெயவர்த்தனா!

ஊடக அறிக்கை 2012


பேராசிரியர் ஜயலத் ஜயவர்தன,
எம்.பி.பி.எஸ் (இலங்கை)
எப்.ஐ.சி.எஸ். (அமெரிக்கா) எம்.டி.
பாராளுமன்ற உறுப்பினர்

2012ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு திருத்த நடவடிக்கைகள் 2012 ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் சங்கமித்த மாவத்தை முதல் பருத்தித்துறை வரை 18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் வாக்குரிமை அளிக்கப்படுகின்றது.

எனினும் குறிப்பாக நமது நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமது பெயரை வாக்காளர் இடாப்பில் சேர்த்துக் கொள்வதில் பல்வேறு நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் சந்தித்து வருவதாக தெரியவருகின்றது.

நாட்டில் இப்படியான நெருக்கடிகளை சந்தித்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கு கைகொடுக்க நான் தயார் என தெரிவிக்கின்றேன். இவ்வாறானவர்கள் தங்களது பிரச்சினைகளையும், அசௌகரியங்களையும் கீழுள்ள முகவரிக்கு அறியப்படுத்துமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.



முகவரி :

டாக்டர் ஜயலத் ஜயவர்தன பா.உ
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர்
இலக்கம் - 26ஃடீ
சம்மிட் பிளட்
ஜாவத்த வீதி
கொழும்பு – 05


தொ.இல – 0777304308 , பெஃக்ஸ ஃதொ.பே – 0112507799

மின்னஞ்சல் -doctorjayalath@yahoo.com

No comments:

Post a Comment