Tuesday, June 12, 2012

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 27 பேர் நோய் வாய்ப்பட்டமை தொடர்பில் விசாரணை

கல்முனை பண்டிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோர் திடீரென நோய் வாய்ப்பட்ட சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டிருப்பு பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட 27 பேர், திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வயது வந்தவர்கள் ஐவரும், 22 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு ஐஸ் கிரீம் உட்கொண்டமையினால் நோய்வாய்ப்பட் டிருக்கலாமென, சந்தேகிக்கப்படுகிறது.

கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பொலிஸாரின் தலையீட்டுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஐஸ் கிரீம் உற்பத்தி செய்யும் இடமொன்றும், சீல் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment