Monday, June 4, 2012

வல்லரசுகள் எமக்குப் போதிக்கத் தேவையில்லை - மஹிந்த

புத்தரின் சித்தாந்தம் தெரிந்த எமக்கு வல்லரசு நாடுகள் போதிக்கவேண்டிய தேவைகளில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.பங்கொக்கில் கடந்த சனியன்று உரையாற்றும்போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சிலநாடுகளும் குழுக்களும் தமக்குக் குத்தப்பட்ட வல்லரசு, பிராந்திய வல்லரசு, பொருளாதார வல்லரசு என்ற முத்திரைகளின் அடிப்படையில் ஏனையவர்களுக்கு போதனை செய்ய முயல்கின்றன.

இத்தகைய நாடுகளவற்றின் நடத்தயின் அடிப்படையிலேயே மதிப்பிட்ப்பட்டு, மேலானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுமென ஜனாதிபதி அங்கு கூறினார்.

நவீன உலகின் தலைவர்கள் புத்தபெருமானின் போதனைகளைப் பின்பற்றினால் பல்வேறு பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிடுமெனவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment